Tuesday 17 May 2011

எஸ்.எல்.பி.எல்., டுவென்டி-20

     இலங்கை பிரிமியர் லீக் சார்பில் (எஸ்.எல்.பி.எல்.,) நடத்தப்படும், "டுவென்டி-20' போட்டித் தொடரில் முனாப் படேல், அஷ்வின் உள்ளிட்ட 12 இந்திய வீரர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.ஐ.பி.எல்., தொடரைப் போல, எஸ்.எல்.பி.எல்., "டுவென்டி-20' தொடர், வரும் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 4 ம் தேதி வரை, இலங்கையில் நடக்கிறது. இதில் மொத்தம் ஏழு அணிகள் பங்கேற்கின்றன. 18 நாட்கள் நடக்கும் இத்தொடரில் பங்கேற்க வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், போலார்டு, பாகிஸ்தானின் அப்ரிதி, அக்தர், தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ் உள்ளிட்ட வீரர்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.தற்போது இந்திய வீரர்களும் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதுகுறித்து வெளியான செய்தி:
 
     இலங்கை "டுவென்டி-20' தொடரில் வார்னர், காயத்தில் இருந்து மீண்ட பின் வெட்டோரி ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, தினேஷ் கார்த்திக், இர்பான் பதான், மனிஷ் பாண்டே, மனோஜ் திவாரி, வல்தாட்டி, ரவிந்திர ஜடேஜா, சவுரப் திவாரி, உமேஷ் யாதவ், வினய் குமார் உள்ளிட்ட இந்திய வீரர்களும் பங்கேற்கலாம். முனாப் படேல், அஷ்வின், பிரவீண் குமாரும் இத்தொடரில் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment