Tuesday 17 May 2011

வார்ன் மீது விசாரணை

     ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க செயலரை திட்டிய, வார்ன் மீது இன்று விசாரணை நடக்கிறது.தற்போதைய ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணி, 13 போட்டிகளில் 11 புள்ளிகள் மட்டும் பெற்று, தொடரில் இருந்து வெளியேறியது. இதனிடையே சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது.
 
  இதனால், தங்கள் அணிக்கு சாதகமாக ஆடுகளத்தை மாற்றாத, அம்மாநில கிரிக்கெட் சங்க (ஆர்.சி.ஏ.,) செயலர் சஞ்சய் தீட்சித்தை, வார்ன் திட்டினார்.
இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மற்றும் ஐ.பி.எல்., நிர்வாகத்துக்கு தீட்சித் புகார் தெரிவித்தார். பின் நடந்த செயலுக்கு வார்ன், வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இருப்பினும் இதை தீட்சித் ஏற்கமறுத்தார்.
 
     இதனால், புகாரை விசாரிக்க ஐ.பி.எல்., தலைவர் சிராயு அமீன், முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி ஆகிய இருவர் அடங்கிய விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டது. இன்று இந்த கமிட்டியின் முன்பு ஆஜராகும் வார்ன், தீட்சித்திடம், புகார் குறித்து விசாரணை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment