கயானாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வீழ்த்தியது.பூவா தலையா வென்று முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 226 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது.
பின்னர் விளையாடி பாகிஸ்தான் 160 ரன்னுக்கு சுருண்டது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 66 ரன்கள் முன்னிலை பெற்றது.இதையடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகண் அணி 152 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு 219 ரன் வெற்றி இலக்காக மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயித்தது.நேற்று 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 2 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர் ஷபீக் - மிஸ்பா இணை ஓரளவுக்கு தாக்குபிடித்து விளையாடியது. 42 ரன் ஷபீக் எடுத்திருந்தபோது ராம்பால் பந்தில் ஆட்டம் இழந்தார்.
இதைத் தொடர்ந்து மிஸ்பாவுடன் உமர் அக்மல் இணை சேர்ந்து விளையாடினார். அதை சதம் கடந்த மிஸ்பா சமி பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட்டுக்கு மளமளவென சரிந்தது. மறுபக்கம் உமர் அக்மல் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வார் என்பது எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமி பந்தில் உமர் அக்மல் ஆட்டம் இழந்தார். இவர் 47 ரன் எடுத்தார்.
பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வெளியேறினர். 4வது நாளிலேயே மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தானை 178 ரன்னுக்கு சுருட்டியது. இதனால் 40 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.மேற்கிந்திய தரப்பில் சமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராம்பால் 4 விக்கெட்டுகளையும், ரோச் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகனாக சமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி 20ஆம் தேதி நடைபெறுகிறது.
No comments:
Post a Comment