
இது குறித்து அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட் கூறியது:
பஞ்சாப் அணிக்காக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட பியுஸ் சாவ்லா, வெற்றிக்கு பெரிதும் உதவி வருகிறார். டில்லிக்கு எதிரான கடந்த போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார். சர்வதேச தர வாய்ந்த பவுலரான இவர், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளது சிறப்பம்சம். ஷேன் மார்ஷ், வல்தாட்டி மீண்டும் எழுச்சி பெற்றுள்ளனர். கடந்த போட்டியில் டில்லி வீரர்கள், பீல்டிங்கில் சொதப்பியது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. இந்த வெற்றி அதிக தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. வரும் போட்டிகளிலும் பஞ்சாப் அணியின் வெற்றி தொடரும்
இவ்வாறு கில்கிறிஸ்ட் கூறினார்.
இவ்வாறு கில்கிறிஸ்ட் கூறினார்.
No comments:
Post a Comment